திருச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறையினர் காண குறைதீர் முகாம் திருச்சி சுப்பிரமணிய புரம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

காவல்துறையினருக்கான குறைதீர்க்கும் முகாமில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி மாநகர், மாவட்டம், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் பங்கேற்றனர்.

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த குறைதீர் முகாமில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு காவல்துறையினரிடம் இருந்து மனுக்களை பெற்றார்.இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *