திருச்சி வயலூர் சாலையில் உள்ள குடமுருட்டி ஆற்றில் நீர் நிறைந்து மிகைநீர் வடிந்து ஆதிநகர், பாத்திமா நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்வதைத் தடுத்திடும் வகையில் ,கரையில் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு இன்று இரவு நேரில் பார்வையிட்டு, மக்களைப் பாதுகாத்திடும் வகையில் கண்காணிப்புடன் பணியாற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார் .

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் மணிமோகன், முன்னாள் துணை மேயர் அன்பழகன் மற்றும் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *