திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த மாதம் 27.08.2021 அன்று 15 வயதுடைய பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தனது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கொத்தமங்கலத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் மீது புகார் அளித்தார் அதன்பேரில் , அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குற்ற எண் : 18/2021 u / s 5 ( L ) , 5 ( J ) ( ii ) r / w 6 ( i ) of POCSO ACT 2012 and 9 Prohibition of Child Marriage Act – ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு , கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளரால் புலன் விசாரணை செய்யப்பட்டு மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . இவ்வழக்கின் புலன்விசாரணையில் மகேஸ்வரன் என்பவர் பாலியல் குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் எனவும் , ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் 16 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வருவதால் , அவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோண்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் . கார்த்திகேயன் குற்றவாளி மகேஸ்வரனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையிட்டார் . அதன் பேரில் 28.08.2021 – ம் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் இருந்து காவல் வரும் மேற்படி எதிரி மகேஸ்வரன் என்பவருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட ஆணையினை கண்டோண்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார் . மேலும் , திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *