திருச்சி விமான நிலையம் அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ அருள்மிகு செல்லாயி அம்மன் சப்பாணி கருப்பு கோயில் உள்ளது. இந்த கோயிலில் வருகின்ற 16ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது.‌இதையொட்டி முன்னதாக திங்கள் கிழமை காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது.

இன்றும்,‌நாளையும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் தினத்தன்று இரவு வானவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது அதன் மறுநாள் 17ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முதல் மண்டலாபிஷேக பூஜை நடைபெறுகிறது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு ஆசி பெற்று செல்ல ஊர் முக்கியஸ்தர்கள் சார்பாகவும் கோவில் நிர்வாகம் சார்பாகவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *