திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் உமா இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தில் உள்ள 104 ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையே இந்த போட்டி நடைபெற்றது. இதில் தேசிய அளவில் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் முதல் இடத்தை பிடித்துள்ளது.அதின் படி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திற்கு “சர்தார் பட்டேல்” சிறந்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் நீடித்த ஆராய்ச்சி பணியில் வாழை மேம்பாடு, உற்பத்தி,பாதுகாப்பு மற்றும் அறுவடை பின் சார் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் வாழை ஆராய்ச்சி மையம் மிக சிறப்பாக பணியாற்றி உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் திருச்சியில் உள்ள வாழை ஆராய்ச்சி மையம் பல்வேறு ஆய்வுகளை சிறப்பாக மேற்கொண்டுள்ளது.பாரம்பரிய வாழைக்காக திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஜீன் வங்கி போல் ஆசியாவில் வேறு எங்கும் இல்லை.15 முதல் 20 ரூபாய்க்கு கிடைக்கும் வாழை கன்றுகளை 5ரூபாய்க்கு கிடைக்கும் வகையில் செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஒரு மனிதனுக்கு தேவையான வைட்டமின், இரும்பு போன்ற சத்துக்கள் ஒரே ஒரு வாழைப்பழத்தின் மூலம் கிடைக்கும் வகையில் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.ஏற்றுமதியை மூன்று மடங்கு அதிகரிக்க செய்துள்ளார்கள் – தேனி வாழை யூரோப் வரை இன்று சென்றுள்ளது.300 மில்லியன் வாழை கன்றுகளை நாங்கள் வேளாண்மை செய்ய வழங்கி உள்ளோம்.சர்க்கரை நோயாளிகள் என்றாலே வாழைப்பழம் சாப்பிட கூடாது என்கிறார்கள் – ஆனால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் வாழைப்பழம் கூட உள்ளது, இது தொடர்பாக ஆய்வில் உள்ளோம், கண்டிப்பாக அதனை வெளியிடுவோம்.சத்துணவு (மதிய உணவில் ) கண்டிப்பாக வாழைப்பழம் வழங்க வேண்டும் – அதே போல் உலர் வாழையை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகிறோம் என தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் உமா திருச்சியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அருகில் முதன்மை விஞ்ஞானிகள் செல்வராஜன், கற்பகம், வடிவேல் குமார் ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *