திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்,படுக்கை வசதிகள்,ஆக்ஸிஜன் இருப்பு போன்றவை குறித்து திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களாகிய நீங்கள் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று கூறினார்.

அப்போது பேட்டி அளித்த திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அருகே அரசு மருத்துவமனை டீன் வனிதா,திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், அரசு மருத்துவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கட்சியினர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கூட்டமாக நின்று பேட்டி அளித்ததை அங்கு வேடிக்கை பார்த்த கொண்டிருந்த நோயாளிகளின் உறவினர்கள் முதலில் சமூக இடைவெளியை நீங்கள் கடைபிடியுங்கள் பிறகு எங்களுக்கு சொல்லலாம் என முணுமுணுத்தபடி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *