தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மாத ஊதியம் இன்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் பூசாரி மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை ரூபாய் 4000 மற்றும் 10 கிலோ அரிசி மற்றும் 10 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் விழா இன்று நடந்தது. அதனையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள்/பட்டாச்சாரியார்களுக்கு நகர்ப்புற துறை அமைச்சர் கே என் நேரு நிவாரண பொருட்களை வழங்கினார் அருகில் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனிஆண்டி மற்றும் கலெக்டர் சிவராசு இணை ஆணையர் சுதர்சன் செயல் அலுவலர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கொரோனா கால நிவாரண உதவியாக ரூபாய் நான்காயிரம், 10 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் நடைப்பெற்றது. இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நிவாரண உதவிகளை அர்ச்சகர்களுக்கு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *