எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று வழங்கினர்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் சுமார் 3 மணிநேரமாக நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி உள்ளிட்டோர் கடிதத்தை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *