தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிகப்படியான தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக யார் வருவார் என அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருவரில் யார் என இரு தரப்புகளை சேர்ந்த ஆதரவாளர்கள் இடையே குழப்பம் நிலவி வந்தது.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/Edappadi_K._Palaniswami1-869x1024.png)
இந்நிலையில் இன்று நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.