திருச்சி கோரையாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் ஆறுபோல் வழிந்தோடுகிறது. மேலும் தீரன் நகர், அருண் நகர் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி தெருக்களில் தண்ணீர் இரவு முதல் தொடர்ந்து வெள்ளம் போல பாய்ந்து ஓடுகிறது.

தீரன் நகர் போக்குவரத்து பணிமனை பின்புறம் உள்ள வாய்க்கால் நிரம்பியதால் கோரையாறு நிரம்பியதும் தண்ணீர் அதிக அளவு தெருக்களில் உள்ள சாலைகளை மறைத்தபடி ஓடுகிறது.

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியவில்லை மின்சாரம் இல்லாததால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

கோரை ஆற்று கரையில் மணல் மூட்டைகளை அடுக்கி கரையை பலப்படுத்தினால் மேலும் வெள்ளச் சேதத்தைத் தவிர்க்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்