திருச்சி மதுரை பைபாஸ் சாலை எடமலைப்பட்டி புதூர் செக்போஸ்ட் அடுத்து உள்ள பசுமை பூங்கா எதிரே உள்ள காலி மனையில் இன்று மாலை சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த அப்பொழுது எதிர்பாராத விதமாக அங்கிருந்த முட்புதரில் பார்த்தபோது குவியல் குவியலாக மனித மண்டையோடுகள் மற்றும் எலும்புக்கூடுகள் இருப்பதை கண்டு சிறுவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இதனைக் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் கண்டு சிறுவர்களை அழைத்து விசாரித்தபோது இப்பகுதியில் மண்டை ஓடுகள் குவியலாக கிடப்பதாக தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவம் இடம் வந்த போலீசார் சாலை ஓரத்தில் மூட்டை மூட்டையாக கிடைத்த மண்டைஓடுகள் குறித்துவிசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் யாரையாவது கொலை செய்த எலும்புக்கூடுகளா, அல்லது மந்திரவாதிகள் யாரேனும் மாந்திரீகத்திற்காக பயன்படுத்திய எலும்புக்கூடுகளா அல்லது மருத்துவ துறையில் ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்த எலும்புக்கூடுகளை இங்கு சாலையோரத்தில் கொட்டி விட்டு சென்றுள்ளனறா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூட்டை மூட்டையாக கிடந்த எலும்பு கூடுகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *