திருச்சி எடமலைப்பட்டி புதூர் மெயின் ரோட்டில் இன்று மதியம் ஈச்சர் லாரியை டிரைவர் ஒருவர் சாலை ஓரமாக குப்பைத்தொட்டி அருகே நிறுத்தி வைத்துவிட்டு டீ குடிக்க சென்றார். இந்நிலையில் குப்பைத் தொட்டியிலிருந்து திடீரென பரவி தீ அருகிலிருந்த ஈச்சர் லாரியின் முன்பகுதியில் பற்றி எரிந்தது.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சித்தனர். அப்பொழுதும் தீ அணையாமல் வேகமாக பரவியதால் உடனடியாக கண்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர் மேலும் தீ பரவியது குறித்து போலீஸ் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.