திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தவர் சுபாஷினி இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்றபோது திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார் இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து சுபாஷிணி உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர் அவரது இறுதிசடங்கு பெரமூர் கிராமத்தில் நடைபெற்றது.

இதையடுத்து திருச்சி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் பால்வண்ணநாதன் முன்னிலையில் போலீசார் மூன்று முறை வானில் சுட்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.முன்னதாக போலீஸ் அதிகாரிகள் பெண் காவலர் சுபாஷினியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *