கடந்த 13.08.2021 அன்று கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண் ஒருவர் தன்னுடைய 12 வயது மகளுக்கு டாக்டர். ரமேஷ் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரால் புலன் விசாரணை செய்யப்பட்டதில் திருச்சியை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர்.ரமேஷ் என்பவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .

 

இவ்வழக்கின் விசாரணையில் டாக்டர்.ரமேஷ் என்பவர் பாலியல் குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதால் , அவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோண்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் மேற்படி டாக்டர் ரமேஷ் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார் . அதன் பேரில் 17.09.2021 – ம் தேதி திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் டாக்டர். ரமேஷ் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *