சி.ஐ.டி.யு தமிழ் மாநில 15-வது மாநாடு நாகர்கோவிலில் வருகிற நவம்பர் 6-ம் தேதி செஞ்சட்டை பேரணி நடைபெறகிறது. முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரரும் சிஐடியுவின் தமிழக முதல் பொதுச் செயலாளரும் புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினரும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினருமான மறைந்த உமாநாத் அவர்களின் நினைவு ஜோதி பயணம் திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா ஆர்ச் முன்பாக இன்று துவங்கியது.

இந்த ஜோதி பயணத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஜோதியை முன் எடுத்து சென்றார். இந்த நினைவு ஜோதி பயணமானது ஸ்ரீரங்கம் ராகவேந்திரா ஆர்ச் முன்பாக துவங்கி செக் போஸ்ட், அண்ணா சிலை, காந்தி மார்க்கெட் , தென்னூர் இபி, உறையூர் குறத்தெரு, மத்திய பேருந்து நிலையம், திருவரம்பூர், டிவிஎஸ் டோல்கேட், ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு சென்று முடிவடைகிறது அதனைத் தொடர்ந்து நாளை 29ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த நினைவு ஜோதி பயணம் தொடங்க உள்ளது. இந்த பயண குழுவில் திருச்சி மாநகரத் தலைவர் சீனிவாசன் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா பொருளாளர் மணிகண்டன் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் மாவட்ட துணைத்தலைவர் செல்வி மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்