தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர்ப்புற சொத்து வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது. இதனை கண்டித்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு புதிய தமிழக கட்சியின் சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் தமிழக அரசு விதித்த சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து தமிழக அரசு வரி உயர்வை கண்டித்தும் அதை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் தினகரன், கிழக்கு மாவட்ட செயலாளர் பிச்சைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாநகர துணை செயலாளர் ராஜா வரவேற்றார். இதில் கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் வாழையூர் குணா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் அருள்ஜோதி உரையூர் அசோக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது சொத்தைப் பாதுகாக்க வரியா ?சொத்தை விற்க வரியா என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *