காங்கேயம் பகுதியில் கடந்த சில நாட்களாக கஞ்சாவின் புழக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த பகுதி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஒன்பதாவது படிக்கும் பள்ளி மாணவர்கள் முதல் காலேஜ் படிக்கும் இளைஞர்கள் வரை அதிக நபர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகி வருகின்றனர். மேலும் தங்கள் பெற்றோரை அடித்து துன்புறுத்தியும் வருகின்றனர். இது குறித்து “காங்கேயம் பசியை போக்குவோம்” குழுவிற்கு இந்த ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக இந்த இளைஞர்கள் கஞ்சா வாங்குவது போல் நடித்து இன்று காலை காங்கேயம் பகுதி கோட்டைமேடு வீதியில் கஞ்சா விற்ற வாலிபரை தனது செல்போன் மூலம் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரி வருகின்றனர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *