தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேர் தீ விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தனி விமானம் மூலம் தஞ்சைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு அறிவித்த ரூ.5 லட்சம் நிவாரண நிதியுதவியை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு ரூ.25,000 நிவாரண உதவியை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து உறவினர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *