வருகிற மே-6ம் தேதி காலை 4.00 மணி முதல் மே-20ம் தேதி காலை 4.00மணி வரை புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக , மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது . இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 2021 முதல் தொடர்ந்து கோவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது . அண்மை காலங்களில் இந்திய அளவில் ஒரு சில நாட்களில் நாளொன்றுக்கு நான்கு லட்சத்தைத் தாண்டியும் பதிவாகி உள்ளது . குறிப்பாக , மஹாராஷ்ட்ரா , கர்நாடகா , கேரளா , உத்திரப்பிரதேசம் , டெல்லி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது . தமிழ்நாட்டிலும் படிப்படியாக இந்த நோய்த்தொற்று , பிப்ரவரி மாதக் கடைசியில் நாளொன்றுக்கு 450 என்ற நிலை மாறி தற்பொழுது நாளொன்றுக்கு 20,000 – க்கும் மேல் பதிவாகி வருகிறது . 23 – க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்று உறுதியாகும் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளது . தமிழ்நாட்டில் 03.05.2021 – ஆம் நாள் கணக்கீடுபடி , தற்போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.23 லட்சமாக உள்ளது .கடந்த 30.04.2021 அன்று , தமிழக அரசின் தலைமைச் செயலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் போது , சுகாதாரத் துறையால் அளிக்கப்பட்ட நோய்ப் பரவல் விகிதாச்சார அறிக்கையினை பரிசீலனை செய்ததில் , தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் நோய்த் தொற்று விழுக்காடு 10 சதவீதத்திற்கு மேலாக உள்ளது . மேலும் , மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் நிரம்பியுள்ளது தொடர்பான அறிக்கையினை பரிசீலனை செய்ததில் , பல்வேறு மாவட்டங்களில் ஆக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 60 விழுக்காட்டிற்கு மேல் நிரம்பியுள்ளது தெரியவருகிறது . தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டும் , நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும் , தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த , தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் ,
06.05.2021 காலை 4.00 மணி முதல் 20.05.2021 காலை 4.00 மணி வரை பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன .

புதிய கட்டுப்பாடுகள் .
அனைத்து அரசு அலுவலகங்களும் , தனியார் அலுவலகங்களும் , அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது . • பயணியர் இரயில் , மெட்ரோ இரயில் , தனியார் பேருந்துகள் , அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பொது மக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது . . 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள் ( Big format Shops ) , வணிக வளாகங்கள் ( Shopping Complex & Malls ) இயங்க 26.4.2021 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது . தற்போது , வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை . இவை தவிர , தனியாக செயல்படுகின்ற மளிகை , பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் , ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் . மேற்கூறிய மளிகை , பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர , இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது . மருந்தகங்கள் , பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது . அனைத்து உணவகங்களிலும் ( Restaurants / Hotels / Mess ) பார்சல் சேவை ( Take away service ) வழங்க மட்டும் அனுமதிக்கப்படும் . தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் . உணவகங்கள் மற்றும் தேநீர்கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை . விடுதிகளில் ( Hotels and Lodges ) தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும் . உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை . • உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில் , சமுதாயம் , அரசியல் , விளையாட்டு , பொழுதுபோக்கு , கல்வி , கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை செய்யப்படுகிறது . திரையரங்குகள் செயல்படாது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று.அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம் , தினசரி பத்திரிகை விநியோகம் , மருத்துவமனைகள் , மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் , மருந்தகங்கள் , ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் , போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் , அனைத்து சரக்கு வாகனங்கள் , விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் , எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ( Petrol , Diesel & LPG etc. ) ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் , உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும் , நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும் , மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது . Swiggy , Zomato போன்ற மின் வணிகம் ( e – commerce ) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது . . மற்ற மின் வணிக ( e – commerce ) நிறுவனங்களின் வேவைகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி இல்லை . ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம் . சனி கிழமைகளில் மீன் மார்க்கெட் , மீன் கடைகள் , கோழி இறைச்சி கடைகள் மற்ற இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை . இதர நாட்களில் காலை 6.00 மணி முதல் 12.00 வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது . கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி , பொது இடங்களில் முகக் கவசம் அணிவது , சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது , கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் . மேலும் , நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் , பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும் . பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அரசு கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *