திருச்சி விமான நிலையம் வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்…

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களிடையே கூட்டத்தை குறைக்கும் வகையில் பல்வேறு வகையான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆயினும் அதனை மீறி பொதுமக்கள் கூட்டம் கூடுவது வருத்தத்தை அளிக்கிறது.அதனை தவிர்க்க வேண்டும்.

மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளாட்சி அமைப்புகளும் காவல்துறையினருடன் இணைந்து கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் இழப்பீடுவழங்குவது குறித்து மத்திய அரசு அறிவித்தால் தமிழக அரசும் அது குறித்து முடிவு செய்யும்.

தடுப்பூசி போடப்படும் பணிகளை தமிழக முதல்வர் நேரில் ஆய்வு செய்து அப்பணியில் ஈடுபடுபவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இன்று ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 22 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது இதில் 11 லட்சத்து 50 ஆயிரம் பேர் முதல் முறை தடுப்பூசியையும், 11 லட்சம் பேர் இரண்டாவது முறை தடுப்பு ஊசியையும் போட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை அரசு சார்பில் மட்டும் 5 கோடியே 38 லட்சத்து 628 பேருக்கு அரசு சார்பில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.

கோவேக்சீன் 28 நாட்களுக்குப் பிறகும், கோவீஷில்டு 84 நாட்களுக்கு பிறகும் செலுத்த வேண்டும் என்று ஐ சி எம் ஆர் வழிகாட்டுதலின் அடிப்படையில் 2 வது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.கொரோனா மூன்றாவது அலை வராது என புறக்கணித்துவிட முடியாது என கூறினார்….

இந்தப் பேட்டியின் போது நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *