இன்று நடந்த நான்காவது மெகா தடுப்பூசி முகாம் 24,882 இடங்களில் நடத்தப்பட்டது. அதில் இன்று 17,19,544 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 62 சதவீதம் பேருக்கும் திருச்சி மாவட்டத்தில் 63 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரொனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. தற்போது போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

மழைக்காலம் வந்தாலே டெங்கு பரவும் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் உள்ளாட்சி நிர்வாகமும் மக்கள் நல்வாழ்வு துறையும் இணைந்து பணியாற்றி வருகிறது. டெங்கு பரவலை தடுக்க மேலும் துரித நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட சுகாதார அலுவலர்களிடம் அறிவுறுத்தப்படும்.

இரண்டு,மூன்று மாதங்கள் மட்டுமே பணி செய்து விட்டு தற்கால செவிலியர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராடுகிறார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை இருப்பினும் அவர்களை நாளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளோம். போராடியவர்கள் போராட்டம் நடத்தியதற்கு வருத்தம் தெரிவித்தார்கள். எந்த விழாவாக இருந்தாலும் கொரொனா வழிக்காட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறை வழங்கி வருகிறோம். நீட் தேர்வை தலைகீழாக நின்றாலும் ரத்து செய்ய முடியாது என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதற்கு பா.ஜ.க வினரை தலைகீழாக நிற்க வைத்து அழகு பார்க்க நாங்கள் விரும்பவில்லை. விரைவில் அவர்களை மகிழ்ச்சி படுத்துவோம் என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்