தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் நாகை செல்வன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் துணைத் தலைவர் மாரியப்பன் இணைச் செயலாளர் சுப்பிரமணியன் சுரேஷ்குமார் தினேஷ் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாவட்ட தலைவர் தாசன் வரவேற்புரையாற்றினார். மாநில பொருளாளர் சத்தியமூர்த்தி தீர்மான அறிக்கையை வாசித்தார்.

இக்கூட்டத்தில் சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும் நிலை 2 சுகாதார ஆய்வாளர்கள் அனைவருக்கும் நிலை 1 சுகாதார ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 1 மற்றும் சுகாதார ஆய்வாளர் நிலை 2 வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் போன்ற பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *