தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-ஆம் ஆண்டிற்கான இரண்டாம்நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 13.12.2020 அன்று நடைபெற்றது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக கடந்த 26-ம் தேதி திருச்சி, சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்டஆயுதப்படை மைதானத்தில் அசல்சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல் (ஆண்களுக்கு உயரம் அளத்தல், மார்பளவு அளத்தல், உடற்தகுதி தேர்வு (ஆண்களுக்கு 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களுக்கான ஓட்ட தேர்வுகள் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று பெண்களுக்கான உடல்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் உயரம் மற்றும் 400 மீட்டர் ஓட்டத் தேர்வு நடந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இந்த தேர்வு தமிழ்நாடு சீருடை பணியாளர் துணைக்குழுவின் தலைவர் திருச்சி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் முனைவர்.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்