திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தின் மாநிலத்தலைவர் அமலராஜன் தலைமையில் பொதுச்செயலாளர் கனகராஜ், துணைப் பொதுச் செயலாளர் ரமேஷ், மாநில துணைத்தலைவர் அப்துல், மாநிலச் செயலாளர் அருட்சகோ.சகாயமேரி, லூயிஸ், உள்ளிட்ட நிர்வாகிகள் திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நகர்புற துறை அமைச்சர் கே என் நேரு ஆகியோரிடம் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 15,90,503/- முதல் தவணையாக வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து பணிக்காலத்தில் மரணமடைகின்ற அரசு நிதியிலிருந்து ஊதியம் பெறுகின்ற அரசு நிதிஉதவி பெறும் பள்ளி ஆசிரியர், ஆசிரியரல்லாப் பணியாளர்களின் தகுதியான வாரிசுகளுக்கு அரசுத்துறைகளில் பணி நியமன வாய்ப்பினை உறுதிப்படுத்த வேண்டும், மருத்துவ மாணவர் இட ஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டும், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு அனுமதித்த பணியிடங்களில் நியமனம் பெற்று ஊதியமின்றி பணி செய்து வருகின்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் அமைச்சரிடம் வலியுறுத்தினர்.