தமிழக காவல் துறையில் உச்சபட்ச அதிகாரம் படைத்த பதவி டிஜிபி. ஒவ்வொரு ஆட்சியிலும் ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரிகள் இந்தப் பதவியை அலங்கரித்திருக்கிறார்கள். தற்போது திரிபாதி அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். ஆனால் நாளையுடன் அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது.சீனியாரிட்டி படியும், திமுக மத்தியில் நல்ல பெயர் பெற்றவருமான சைலேந்திர பாபு ஐபிஎஸ், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வுபெறவுள்ளார். இதனிடையே தற்போது அவருக்கு டிஜிபி பதவி வழங்கப்பட்டுள்ளது. சைலேந்திர பாபு, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962 இல் பிறந்த இவர், 1987 ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்றவர்.அதன்பின் கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் எஸ்.பியாக பணியாற்றியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *