கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலவன் இவருக்கு 2008ல் பாரதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3-ஆண் குழந்தைகள் இதில் மூத்த மகன் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் வறுமையின் காரணமாக அவருடைய மனைவியை கைக்குழந்தையுடன் துபாய்க்கு வேலைக்காக அனுப்பினார்.
போன இடத்தில் அவரது மனைவி எதிர்பாராதவிதமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு கடந்த மே மாதம் 29 ஆம் தேதி இறந்து விட்டார். அந்த கைக்குழந்தை மட்டும் அங்கே தனியாக தவித்த நிலை குறித்து. துபாய் நகர திமுக அமைப்பாளர் மீரான் என்பவரின் கவனத்துக்கு தெரியவர, அவர் இதை முதல்வர் கவனத்துக்கு கொண்டு போய் சீரிய முயற்சி எடுத்த நிலையில் 11 மாத கைக்குழந்தை இன்று மாலை ஒருவரின் பாதுகாப்பில் திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த குழந்தையை வாங்கிக் கொண்டு செல்வதற்காக விமான நிலையத்தில் தந்தை வேலவன் மற்றும் அவரது இரண்டாவது மகன் காத்திருந்து அந்த குழந்தையை பெற்றுக் கொண்ட காட்சி அங்கு பார்ப்போரை கண் கலங்க செய்தது..