பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட கூட்டுறவு பால்பண்ணை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் திருச்சி ஆவின் நிறுவன நுழைவு வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம் சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் மாறன் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக திருச்சி ஆவின் பால் பண்ணையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 5 மாதமாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை உடனே வழங்க கோரியும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் நிர்ணயித்துள்ள தினக்கூலி ரூ.575-ஐ வழங்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்