தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான வெல்ல மண்டி நடராஜன் தலைமையில் தென்னூரில் உள்ள அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதாக தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்த திமுக தமிழ்நாட்டு மாணவர்களை ஏமாற்றும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்யததை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது திமுக, ஆனால் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலைகள் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தியதை கண்டித்தும், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டி தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் போகிற கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்க திமுக அரசை கண்டித்து கருப்பு பேஜ் அணிந்து, கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன், ஆவின் சேர்மனும், மாணவரணி மாவட்டச் செயலாளருமான கார்த்திகேயன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், துணை ச் செயலாளர் வனிதா, பொருளாளர் மனோகரன், மாவட்ட அணிச் செயலாளர்கள் எம்.ஜி.ஆர். மன்றம் ராஜ்குமார், பேரவை பத்மநாதன், எம்.ஜி.ஆர்.இளை ஞரணி முத்துக்குமார் மற்றும் பலர் உள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *