பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் தோன்றிய மாதமான செப்டம்பர் மாதத்தை திமுக தகவல் தொழில்நுட்ப அணி திராவிட மாதம் என அறிவித்து கொண்டாடி வருகிறது.

அந்த வகையில் திருச்சி மத்திய மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் சார்பில் இருசக்கர வாகன பேரணி கோகினூரில் இருந்து துவங்கி புத்தூர் பெரியார் மாளிகை வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணியை மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி துவங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.

இப்பேரணியில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, வட்ட, வார்டு, நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின்பு பெரியார் மாளிகையில் உள்ள பெரியாரின் திரு உருவ சிலைக்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமான மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..

இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஏ .கே அருண், ஸ்ரீரங்கம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *