உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் பாதிப்புகளும், இறப்பு விகிதமும் அதிகரித்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பெரும் முயற்சியாலும் கொரோனா தடுப்பூசி மற்றும் முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றின் மூலம் கொரோனா படிப்படியாக குறைந்து வந்தது.

இதற்கிடையில் ஒமைக்ரான் நோய்தொற்று பரவி வருவதாக சுகாதார துறை தெரிவித்தது. மேலும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகள் தற்போது சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் நேற்று 221 ஆக இருந்த கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 16 பேர், ஆனால் இன்று ஒருநாள் மட்டும் 123 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருச்சியில் தற்போது 327 ஆக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு திருச்சி மக்களுக்கு லேசான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்