உலக பெண்கள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. திருச்சி யுகா பெண்கள் அமைப்பு மற்றும் திருச்சி உறையூர் மெத்தடிஸ்ட் பள்ளி சார்பில் தற்போது, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த வலியுறுத்தியும், பெண்கள் தினத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தி

1300 பள்ளி மாணவிகள் “அமைதி புறா” வடிவில் அமர்ந்து கொண்டு நடுவில் இந்திய தேசிய கொடியை பள்ளி மாணவிகள் கையில் பிடித்துக்கொண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த வலியுறுத்தியும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் பெண்கள் தினத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து திருச்சி பெண்கள் அமைப்பின் தலைவர் அல்லிராணி மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர் சமாதானப் புறாவை பறக்க விட்டனர். அதனைத் தொடர்ந்து நடந்து முடிந்ததா கட்டுரை போட்டிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *