திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அமெரிக்கன் வழியாக அரசு மருத்துவமனை சாலை, தென்னூர் சாலை, தில்லை நகர் பகுதி வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக வண்டி எண் TN 45 N 3534 பதிவு கொண்ட அரசு பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவில் மோதி விபத்திற்கு உள்ளானது.

இந்த விபத்தில் சிறுவன், பெண்கள் உட்பட ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் விபத்துக்குள்ளான அரசு பேருந்தை ஓட்டி வந்தவர் ஓட்டுநர் சகாய சபரி முத்து வயது 58 என்பதும்,

அமெரிக்கன் மருத்துவமனை அருகே வந்தபோது அரசு பேருந்தின் பிரேக் டியூப் வெடித்ததால் பேருந்து அதன் கட்டுப்பாட்டை இழந்து ரவுண்டானாவில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *