திருச்சி துரைசாமிபுரம் 2-வது தெருவில் உள்ள வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த ஆய்வாளர் தங்கவேல் வீட்டில் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் மேலும் இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது விசாரணையில் இதே பகுதியில் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வருபவர் கோவிந்தராஜ் வயது 48 திருமணமாகாதவர் இவரது தந்தை சீனிவாசன் பல வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவரது தாயார் ராஜம்மாள்.

உடன்பிறந்த சகோதரிகள் 3 பேர் திருமணமாகி வெளியூர் சென்று விட்டதால் தனது தாயைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இத்தனை வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் தாய் ராஜம்மாள் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் கடந்த சில நாட்களாக கோவிந்தராஜ் சோக முகத்துடன் காணப்பட்டுள்ளார். மேலும் இவரை இரண்டு நாட்களாக அருகில் குடியிருப்பவர்கள் பார்க்கவில்லை என தெரிவித்தனர். இந்நிலையில் இன்று பிணமாக அவரது வீட்டில் அழுகிய நிலையில் கிடந்துள்ளார். தற்போது பாலக்கரை போலீசார் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர் மேலும் கோவிந்தராஜ் உடல் நலக் குறைவு காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமாக உயிரிழந்தாரா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *