திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே டூவிலரில் சாலையைக் கடக்க முயன்ற போது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி!

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்த மாலிக் மற்றும் ஷாஜகான் இருவரும் டூவிலரில் வந்தபோது அரியமங்கலம் பால்பண்ணை பேருந்து நிறுத்தத்தில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது திருவெறும்பூரில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு அந்த இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்,

இப்பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து வாகனங்கள் வேகமாக வருவதாலும் சாலையை கடந்து கடந்து செல்லும் போது வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துகள் நடைபெறுகிறது. சாலையை கடந்து செல்வதற்கு உக்கடை அரியமங்கலம் பகுதியில் சர்வீஸ் சாலை இருந்தும் அதில் வாகனங்களை அதிகமாக நிறுத்தி விட்டுச் செல்வதால்அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இது போன்ற வாகன விபத்துகளில் உயிர் பலி ஏற்படாமல் இருக்க உக்கடை அரியமங்கலம் பகுதியில் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலையில்நிறுத்தும் வாகனங்களை அகற்றி சர்வீஸ் சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பழைய அலங்கார் தியேட்டர் வழியாக உள்ள சர்வீஸ் சலையை பால்பண்ணை வரை அமைக்க வேண்டும். தனியார் பேருந்துகள் வருமானத்திற்காக போட்டிபோட்டு வேகத்தின் கட்டுப்பாடுகளை மதிக்காமல் செல்வதாலும் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

இந்த வாகன விபத்தில் இறந்த மாலிக் என்பவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஷாஜஹான் என்பவருக்கு திருமணம் முடிந்து 10. வயதில் ஒரு பையன் 7 வயதில் பையன் இரண்டு மகன்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்