திருச்சி கல்லுக்குழி நாயக்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் காளீஸ்வரி (வயது 19 ).இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார் . இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பேக்கரிக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. மேலும் காளீஸ்வரி குறித்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் பெற்றோர் தேடி பார்த்தும் இளம் பெண் கிடைக்காததால். திருச்சி கண்டோன்மெண்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான காளீஸ்வரியை தேடி வந்தனர். இதற்கிடையே காளீஸ்வரி ஒரு வாலிபரை திருமணம் செய்து கொண்டு திண்டுக்கல்லில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இது தெரிந்த காளீஸ்வரியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றி கண்டோன்மெண்ட் சப் இன்ஸ்பெக்டர் அகிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *