திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொன்னம்பலதான் பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன். இவரது மனைவி நித்யா( 27) இவர்களுக்கு நல்லகண்ணு வயது (6), ரோகித் வயது (4) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அன்று முதல் அடிக்கடி இருவருக்கும் தகராறு நடைபெறுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த சண்டையில் கணவருடன் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டிற்கு சென்றிருந்த நித்யா, ஜூன் 30-ஆம் தேதி கணவர் வீட்டுக்கு திரும்பினார்.

இந்நிலையில் கடந்த 1-ஆம் தேதி தனது இரண்டு குழந்தைகளுக்கும் பிஸ்கட்டில் எலி பேஸ்ட் கலந்து சாப்பிட கொடுத்து தானும் திண்று தற்கொலைக்கு முயற்சித்தார். மயங்கி கிடந்த அவர்களை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நித்யா நேற்று வெள்ளிக்கிழமையும், குழந்தைகள் இருவரும் இன்று சனிக்கிழமை காலை உயிரிழந்தனர். இந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *