திருச்சி துறையூர் நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்ந்து படுஜோராக நடைபெற்று வருவதாக வார்டு உறுப்பினர் ஒருவர் நகர்மன்ற கூட்டத்தில் கடந்த வாரம் புகார் எழுப்பினார் – மேலும் இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் காவல்துறையினர் தொடர்ந்து துறையூர் பேருந்து நிலையம் பாலக்கரை மற்றும் முக்கிய இடங்களில் சோதனை செய்து வந்தனர்.

இதற்கிடையே தனிப்படை போலீசாருக்கும் தகவல் வழங்கப்பட்டு நேற்று பாலக்கரை அருகே சோதனை செய்தபோது பச்சை பெருமாள்பட்டி வெள்ளாளர் தெருவை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகனான அருண்குமார் காரில் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது, இதனை எடுத்து அதிரடியாக காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்ததோடு கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

இவர் திமுகவில் பச்சை பெருமாள் பட்டி கிளை செயலாளர் இருந்து தற்போது இளைஞர் அணியில் பொறுப்பில் உள்ளதும் தனது சொந்த ஊரில் இருந்து துறையூருக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. துறையூர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் கஞ்சா விற்பனை தொடர்பாக கடந்த ஒரு மாதத்தில் யாரும் கைது செய்யப்படாத நிலையில் தனிப்படை போலீசார் 2 கிலோ கஞ்சாவையும் கடத்தி வந்த நபரையும் அதிரடியாக மடக்கி பிடித்த சம்பந்த அப் பகுதியில் உள்ள மக்கள் காவல்துறையின் நடவடிக்கை மீது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *