திருச்சி தாராநல்லூர் வாழைக்காய் மண்டி கிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டில் 60 ஆண்டு கால பழமையான அடுக்குமாடி கட்டிடம் உள்ளது இந்த கட்டிடத்தில் மொத்தம் 22 வீடுகள் அதில் 8 வீடுகளில் 30க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக கட்டிடத்தின் பால்கனிகள் வலுவிழந்து நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.

இதில் வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த மூதாட்டி பெரியநாயகி வயது 74 என்பவர் படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இதுகுறித்து திருச்சி காந்தி மார்க்கெட் காவல்துறையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டு சம்பவம் இடம் வந்த போலீசார் வீட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதேபோல் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகளும் இடிந்து விழுந்த கட்டிடம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *