திருச்சி சென்னை பைபாஸ் சாலை சஞ்சீவி நகர் பகுதியில் கோட்டை போலீசார் தீவிர வாகன சோதனை பட்டிருந்த பொழுது அந்த வழியாக கர்நாடக மாநிலம் நம்பர் பிளேட் கொண்ட மினிடோர் லோடு வேன் ஒன்று வேகமாக வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அந்த முட்டைக்கோஸ் ஏற்றுக்கொண்டு வந்த மினிடோர் வாகனத்தை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் வாகனத்தை சோதனையிட்டதில் முட்டைகோஸ் மூட்டைக்கு அடியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக மறைத்துப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மினிடோர் வேன் மற்றும் அந்த வாகனத்தில் வந்த இருவரையும் போலீசார் விசாரணைக்காக கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.‌ மேலும் இது குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கோட்டை காவல் நிலையம் வந்தார்.

முதற்கட்ட விசாரணையில் கடத்தப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு 30 லட்சம் எனவும் இவற்றைக் கொண்டு வந்தவர்கள் பெங்களூருவை சேர்ந்த சோம சேகர் வயது 22 மற்றும் அவருடன் வந்த மனோஜ் வயது 26 என்பதும் தெரியவந்தது. மேலும் இந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை எங்கிருந்து கொண்டு வந்து எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *