தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடித்து தெருக்கள் எல்லாம் குப்பை கூளமாக மாறியதையொட்டி துப்புரவு பணியாளர்களுக்கு உதவிடும் நோக்கில் திருச்சி மாநகராட்சி 35 வது வார்டில் உக்கடை, செந்தண்ணிர்புரம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 40 இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்கள் துப்புரவு தொழிலாளர்களுடன் இணைந்து குப்பைகளை சுத்தம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்.சுரேஷ் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்ட தலைவர் லெனின் மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன் மாவட்ட துணை செயலாளர் ஷாஜகான் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன் மற்றும் முன்னணி தோழர்கள் பாஷா, சோலை ராஜன் மாதர் சங்க பொருளாளர் ரகிலா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செய்த தூய்மை பணியாளர்களாக அப்பகுதி பொதுமக்கள் வியந்து பாராட்டினர். பகுதி குடியிருப்போர் நல சங்கத்தின் நிர்வாகிகள் தோழர்களுக்கு தேவையான டீ உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி கொடுத்து உற்சாகப் படுத்தினர் துப்புரவு பணி மேற்பார்வையாளர் மற்றும் துப்புரவு தொழிலாளிகள் உங்களது உதவியினால் இன்றைக்கு எங்களுடைய பெரும் சுமை குறைக்கப்பட்டுள்ளது உங்கள் செயலை கண்டு மகிழ்கிறோம் என பூரித்து போயினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *