திருச்சி மாவட்டம் வண்ணாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் இவரது மனைவி பிரியா இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.

 

இந்நிலையில் இன்று மதியம் ஜெயச்சந்திரன் வீட்டில் இருந்து பிரியா மற்றும் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தீயில் தாயும் குழந்தையும் எரிந்து கிடந்தனர் இதுகுறித்து ராம்ஜி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த போலீசார் தீயில் கருகி இறந்த தாய் மற்றும் குழந்தையின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக பிரியா தனது குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து ஸ்ரீரங்கம் ஆர்டிஓ, சிந்துஜா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தாயும் குழந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *