திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் மொத்தம் 50937 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று ஒரு நாள் மட்டும் 1775 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1264 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 10823 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக நேற்று 22 பேர் உயிரிழந்த நிலையில், இன்று கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

சமீபகாலமாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *