முசிறி அருகே தண்டலை புத்தூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் கொரனோ சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தண்டலை புத்தூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் சுதா .இவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் விஏஒ சுதாவிற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானது. இதையடுத்து இவரது சொந்த ஊரான சேலம் பகுதியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சுதா பரிதாபமாக உயிரிழந்தார்.முசிறி தாலுகாவை சேர்ந்த பெண் கிராம நிர்வாக அலுவலர் கொரோனா நோய் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இறந்த சம்பவம் வருவாய்துறை அலுவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *