திருச்சி கம்யூனிஸ்ட் கட்சியினர், மாதர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பாக திருச்சி உறையூர் சாலை ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் அவர்கள் கூறியதாவது;

தொடர்ந்து உறையூர் சாலை ரோடு பகுதியில் அதிகமான மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதனால் பெண்கள் இயல்பாக சாலையை நடந்து செல்ல முடியவில்லை. சாலைகளில் செல்லும் போக்கு வரத்துக்கு அதிகமாக இடையூறுகள் ஏற்படுகிறது. தினமும் குடிமகன்கள் குடித்துவிட்டு சாலையில் தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் விட்டு விட்டோம் ஆனாலும் எந்த பயனும் இல்லை. இந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடுகள் நடந்து இருந்தது. அதனை பார்த்த போது மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்பதனை வலியுறுத்தி என்பதை போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் தமிழக அரசு எங்கள் போராட்டத்திற்கு செவிசாய்க்க வேண்டும் இந்த புதிய டாஸ்மாக் கடையை திறக்க கூடாது இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி அடைந்த சி.பி.எம். கட்சியின் கவுன்சிலர் சுரேஷ் கலந்து கொண்டு தன் எதிர்ப்பைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்