திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பின்னவாசல் பகுதியைச் சேர்ந்த சுதாகரன் (44) இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக உள்ளார். இந்நிலையில் நேற்று பேருந்தை திருச்சியிலிருந்து அரியலூர் நோக்கி ஒட்டி சென்ற போது நம்பர் ஒன் டோல்கேட் அருகே வந்த போது முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து திரும்பிய இளைஞர்கள் பேருந்தை நிறுத்த சொல்லி தகராறு செய்து ஓட்டுனர் சுதாகரனை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்

இதில் காயமடைந்த ஓட்டுனர் சுதாகரன் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். தகவலறிந்த கொள்ளிடம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதை அறிந்து இளைஞர்கள் ஓடினர். இதில் லால்குடி அருகே உள்ள பச்சாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சந்துரு (26) என்ற இளைஞர் மட்டும் பிடிபட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *