தமிழக உள்ளாட்சி தோ்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில், திருச்சி மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களை நகா்புற வளா்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அறிமுகம் செய்து தோ்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருச்சி பொன்நகர் வார்டு ராமதாஸ், கருமண்டபம் வார்டு மஞ்சுளாதேவி பாலசுப்பிரமணியன், கிராப்பட்டி வார்டு கவிதா செல்வம், எடமலைப்பட்டி புதூர் வார்டு முத்து செல்வம், இராமச்சந்திர நகர் 62-வது திமுக உள்ளிட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவா் பேசுகையில் தமிழகத்திலேயே அதிகளவில் வாக்குகளை பெற்றது இந்த மார்சிங்பேட்டை பகுதியில் தான். கடந்த 3 முறையும் இந்த பகுதியில் தான் திமுகவிற்கான வாக்குகள் பதிவாகி உள்ளது. எனவே இந்தமுறை நான் வெற்றி பெற்று மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு திருச்சிக்கு நான் என்னென்ன பணிகள் செய்துள்ளேன் என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன்.

 

திருச்சியில் உள்ள சாலைகளை செப்பணிட 138 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தெளிவான குடிநீர் கிடைக்க புதிய குடிநீர் பைப்புகள் அமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சிக்கு உட்பட்ட மருத்துவமனைகளை சீரமைத்தும் வருகிறோம். அதேபோல் திருச்சிக்கு 850 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும், சில்லரை வணிகா்களுக்கான பெரிய மார்கெட்டும் அமைக்க முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

மேலும் அதற்கான முதல் தவணையாக 380 கோடி ரூபாய் நிதியும் தந்துள்ளார். திருச்சியில் புதிதாக கழிவறைகளை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. அதுவும் காசு கொடுத்து கழிவறைக்கு செல்லாமல் இலவசமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்கு பிறகு அந்த பணிகள் துவங்கும் என்று கூறினார்.வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க புதிய தொழிற்சாலைகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். சென்னைக்கு நிகராக திருச்சியை விரிவுபடுத்தி லால்குடி, சமயபுரம், தாயகுனூர் உள்ளிட்ட பகுதிகள்வரை மாநகர எல்லையாக விரிவுபடுத்தி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 200 வார்டுகள் அடங்கிய எல்லையை கொண்டது.

அதேபோல் திருச்சியும் அதே அளவிற்கான வார்டுகளை கொண்ட பெரிய நகரமாக மாறும், கோட்டங்கள் அளவில் இருக்ககூடிய பகுதிகளில் மின்மயானங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பேசினார்…

இந்த பிரச்சாரத்தின் போது மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி,மாநகர செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், காஜாமலை விஜி, வட்ட செயலாளர்கள் கிராப்பட்டி செல்வம், பிஆர்பி பாலசுப்பிரமணியன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *