திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க , ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க . காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதின்பேரில் , 28.11.21 – ந்தேதி திருச்சி மாநகரம் , ஏர்போர்ட் காவல் நிலையம் வயர்லெஸ்ரோட்டில் நடந்து சென்றவரிடம் எதிரி பாபு ( எ ) மிட்டாய்பாபு என்பவர் கத்தியை காண்பித்து பணம் பறித்து சென்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்து , நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் . 28.11.21 – ந்தேதி அமர்வுநீதிமன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிராட்டியூர் அருகில் , எதிரி சுரேஷ் என்பவர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு , நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் . 03.12.21 ந்தேதி கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையம் அண்ணாசிலை அருகில் நடந்து சென்றவரிடம் குற்றவாளி விஜயகுமார் என்பவர் கத்தியை காண்பித்து பணம் பறித்து சென்றதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு . நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் . 08.12.21 – ந்தேதி அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் மாளிகை அருகில் , சாலையில் நடந்து சென்றவரிடம் எதிரி தக்காளி முபாரக் முகமது முபாரக் என்பவர் கத்தியை காண்பித்து பணம் பறித்து சென்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு . நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் . 11.11.21 – ந்தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் , மணிகண்டன் என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளி கோபாலகிருஷ்ணன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் . 30.11.28 ந்தேதி காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமுதாய கட்டண கழிப்பிடம் அருகில் , கஞ்சா விற்பனை செய்ததது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு , குற்றவாளி தினேஷ்குமார் வயது 26 என்பவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் . விசாரணையில் மேற்படி வழக்குகளின் குற்றவாளிகளான எதிரிகள் பாபு ( எ ) மிட்டாய்பாபு மீது பல்வேறு காவல் நிலையங்களில் 18 வழக்குகளும் , சுரேஷ் மீது 2 வழக்குகளும் , விஜயகுமார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 43 வழக்குகளும் , தக்காளி முபாரக் @ முகமதுமுபாரக் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 16 வழக்குகளும் , கோபாலகிருஷ்ணன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 4 வழக்குகளும் , தினேஷ்குமார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 21 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது . எனவே , மேற்படி எதிரிகள் பாபு ( எ ) மிட்டாய்பாபு , சுரேஷ் , விஜயகுமார் , தக்காளி முபாரக் @ முகமது முபாரக் , கோபாலகிருஷ்ணன் . தினேஷ்குமார் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும் , அவர்களது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தபட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து , திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள் . அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் கீழ் கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர் . மேலும் , திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *