திருச்சி மாநகர் மாவட்டம், காட்டூர் பகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) பகவதிபுரம் புதிய கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. மேலும் வருகின்ற மார்ச் 23 பகத்சிங் நினைவு தினத்தன்று கொடியேற்றி கிளை துவக்க விழாவும் நடத்திட முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் பகுதித் தலைவர் யுவராஜ், மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் பா.லெனின் உள்ளிட்டோர் சிறப்புரை வழங்கினர். கிளை நிர்வாகிகளாக தலைவர் சாதிக், செயலாளர் சக்திவேல், பொருளாளர் மாரியப்பன், து. தலைவர் முரளி, து.செயலாளர் ஈஸ்வரன் தேர்வு செய்யப்பட்டனர் மற்றும் ஏரளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்