திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை அமைச்சர்கள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு உள்ளிடோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர் 100% கொரோனா தடுப்பூசி போடப்பட்ட ஊராட்சிகளின் தலைவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

இந்த சிறப்பு முகாமின் போது கருமண்டபம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பு ஊசி கோவிஷில்டு செலுத்திய சில நொடிகளிலையே சிறப்பு முகாமில் வளாகத்தில் திடீர் என மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முதல் உதவி அளித்து சிகிச்சை அளித்தனர். கோவிஷில்டு செலுத்திய வாலிபர் மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்