திருச்சி இந்தியன் பேங்க் காலனி பகுதியில் ‘சமர் கார் ஸ்பா’ என்ற பெயரில் கார் வாட்டர் வாஷ் கடை நடத்தி வருபவர் வினோத்.இவர் ட்விட்டர் மூலம் அரசியல் கட்சி தலைவர்கள் கலைஞர்,மோடி,சீமான் ஆகியோரை அவ்வப்போது தரக்குறைவாக பதிவிட்டு வருவதும் அதற்கு அவரது நண்பர்கள் லைக் மற்றும் கமெண்ட்ஸ் கொடுப்பதும் வாடிக்கை.இவர் கடந்த சில நாட்களாகவே விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றி மிகவும் அவதூறாக எழுதி வந்துள்ளார். இதனை கண்டித்து நேற்று அவரது கடைக்கு சென்ற நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சு வார்த்தையின் அப்படையில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் கார் உதிர பாகங்கள் கடைக்காரர் திருச்சி கே கே நகர் காவல் நிலையத்தில் தன்னை மிரட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று இரவு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், வினோத், சரவணன், சந்தோஷ் ஆகிய 4 பேரை திருச்சி கே கே நகர் போலீசார் கைது செய்தனர்.மேலும் மூவரை தேடி வருகின்றனர். 4 பேர் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *